பெருமையை வெல்லும் தாழ்மை! ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை (1கொரி.15:10). இன்று நான் வாழுகின்ற வாழ்வு, முந்திய வாழ்வைவிட சிறப்படைந்தது ஆச்சரியம்தான். இப்படிப்பட்ட மாற்றத்திற்கு, ஒரு மயிர்க்கொட்டிப்புழு வண்ணத்துப் பூச்சியாக மாற்றமடைந்ததை ஒப்பிடலாம். ஆனால்,…
கண்களும் மனதும் திறக்கப்படட்டும்! அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து… (லூக்.24:45). வேதவாக்கியங்களை வாசிக்கும்போது ஏதாவது புரியாதிருந்தால் நாம் என்ன செய்கிறோம்? ஒன்றில் அதைத் தவிர்த்துவிடுவோம்; அல்லது ஏதாவது துணை நூலை நாடுவோம்; அல்லது யாரிடமாவது கேட்போம். எப்போதாவது பரிசுத்த…
என்னை அவர் அறிந்திருக்கிறார்! அவர் மூன்றாம்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, …நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் அறிவீர் என்றான் (யோவான் 21:17). உயிர்த்த இயேசு பேதுருவிடம் சம்பாஷித்த திபேரியா கடலோரத்திலே, இயேசுவின் சிலையொன்றும், அதன் பாதத்திலே மண்டியிட்டு ஏறிட்டுப் பார்ப்பது…
என்னைப் பெலப்படுத்துகின்ற இயேசு! அவர் கர்த்தர் என்று சீமோன் பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், …கடலிலே குதித்தான் (யோவான் 21:7). அவசர புத்தி, இதுவொரு குணவியல்பு. சில வேளைகளில் இது நன்மை தந்தாலும், பல வேளைகளிலும் குழப்பத்தை ஏற்படுத்திவிடும். அதன் பின்விளைவுகள் கஷ்டமாகவே…
விடியலில் இயேசு! விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள் (யோவான் 21:4). எல்லா நம்பிக்கைகளும் சிதைந்து, முயற்சிகள் யாவையும் கைவிட்டு, பிடிப்பற்ற வாழ்வுடன் போராடிக்கொண்டிருக்கும்போது, எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத ஒருவர் நம்மைத் தாங்கும்படி நம் முன்னே வந்து…
சந்தேகக் கேள்விகளும் பதில்களும்! நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார் (யோவான் 20:29). நம் எல்லோருக்குள்ளும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் சந்தேகம் எழத்தான் செய்கிறது. அதில் தவறில்லை. சில காரியங்களை நம்பவேண்டுமென்றால் சில சந்தேகங்களும் கூடவே எழும்பத்தான் செய்கிறது. ஆனால்…
