நம்மை அறிந்தவர் கரத்தில்......... “…மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்?” (பிரசங்கி 6:12). தன் பிள்ளை வெளிநாட்டில் வாழவேண்டும் என்பதில் மிகுந்த வைராக்கிய மாயிருந்த ஒரு தாய், எப்படியோ வெளிநாட்டுக்காரருக்கு மகளைத் திருமணம் செய்து கொடுத்து வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டாள். ஆனால், தன் மகளின் வெளிநாட்டு ஜீவியம் இரண்டு ஆண்டுகள்தான் நிலைக்கும் என்பது அந்தத் தாய்க்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இனிக் கதறி அழுதும் என்ன பலன்? இனி நடக்கப்போவது என்ன, நமது மரணம் நிகழப்போகும் விதம் என்ன…
தேவனோடே போராடுவதா? “தன்னிலும் பலத்தவரோடே போராட அவனால் (மனுஷனால்) கூடாது” (பிரசங்கி 6:10). பழைய நிலையை மறப்பதும், அடுத்தது என்ன என்ற பயத்தைத் தவிர்ப்பதும் மனித இயல்பாகிவிட்டது. வயது முதிரும் என்ற உண்மையையும், நிச்சயமான மரணத்தையும், பின்னால் என்னவாகும் என்று தெரியாத நிலைமையையும் அசட்டை செய்து, ‘எல்லாம் நமது கைகளில்தான் இருக்கிறது’, என்பதுபோல் வாழுவது மடமையாகும்! ‘மனுஷன் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டவன்’, இதுதான் மனிதன் என்ற பதத்தின் அடிப்படையான எபிரெய அர்த்தம். ‘மனிதன்’ என்ற பெயரைக் கொடுத்தது யார்? தேவன்.…
மனதின் நிம்மதி! “மனுஷன் படும் பிரயாசமெல்லாம் அவன் வாய்க்காகத்தானே. அவன் மனதுக்கோ திருப்தியில்லை” (பிரசங்கி 6:7). உழைப்பதெல்லாம் இந்த ஒரு சாண் வயிற்றுக்குத்தானே என நாம் சொல்வதுண்டு. உண்மைதான், எவ்வளவுதான் உழைத்தாலும் ஓரளவுக்குத்தானே உண்ண முடியும்! அன்றாட உணவுக்கே தள்ளாடுகிறவர்கள் பலர் என்றால், சத்துணவு என்று சொல்லி, வயிறு நிரம்பும்வரை குறைந்த கலோரி உணவைக் கட்டுப்பாட்டோடு சாப்பிடுகிற இன்னொரு சாராரும் உண்டு. ஆனால் எவ்வளவுதான் சாப்பிட்டாலும் சற்று நேரத்துக்குள் பசியெடுக்க ஆரம்பித்துவிடும். உழைப்பது, சாப்பிடுவது, இதுதான் வாழ்வா? இயேசு…
சந்தோஷமாயிரு! “உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்” (சங்.5:11). நிச்சயமில்லாத எதிர்காலத்தைக் குறித்தும், நிச்சயமாய் சம்பவிக்கப் போகின்ற மரணத்தைக் குறித்தும் அடிக்கடி குறிப்பிடுகின்ற பிரசங்கி, தேவனை நம்பி அவரை நேசிக்கிறவர்கள், தமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஜீவிய நாட்களை சந்தோஷமாகக் கழிப்பது தேவன் அருளிய ஈவு என்பதையும் குறிப்பிடுகிறார். தேவ பயமற்று கீழ்ப்படியாதவனுக்கோ, வாழ்நாள் மாயையாக, பலனற்றதாக, நோக்கமற்றதாக வெறுமையானதாக இருக்கும். ஆனால், கர்த்தரை நம்புகிறவர்களுக்கோ, சில சமயம் காரணங்கள் விளங்காவிட்டாலும்கூட சகலமும் நன்மைக்கு ஏதுவாகவே…
சந்தோஷமாயிரு! “உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்” (சங்.5:11). நிச்சயமில்லாத எதிர்காலத்தைக் குறித்தும், நிச்சயமாய் சம்பவிக்கப் போகின்ற மரணத்தைக் குறித்தும் அடிக்கடி குறிப்பிடுகின்ற பிரசங்கி, தேவனை நம்பி அவரை நேசிக்கிறவர்கள், தமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஜீவிய நாட்களை சந்தோஷமாகக் கழிப்பது தேவன் அருளிய ஈவு என்பதையும் குறிப்பிடுகிறார். தேவ பயமற்று கீழ்ப்படியாதவனுக்கோ, வாழ்நாள் மாயையாக, பலனற்றதாக, நோக்கமற்றதாக வெறுமையானதாக இருக்கும். ஆனால், கர்த்தரை நம்புகிறவர்களுக்கோ, சில சமயம் காரணங்கள் விளங்காவிட்டாலும்கூட சகலமும் நன்மைக்கு ஏதுவாகவே…
காரணமில்லாத பயங்கள்! அவனுக்கு அது தெரிந்தபோது எழுந்து, தன் பிராணனைக் காக்க யூதாவைச் சேர்ந்த பெயர்செபாவுக்குப் புறப்பட்டுப்போய்… (1இராஜா.19:3). காரணமில்லாத பயம் நமக்குப் பெருங்கேடு விளைவிக்கும். வான்ஸ் ஹாவ்னர் என்பவர் அடிக்கடி ஒரு கதை சொல்லுவார். ஒரு மனிதன் ஓர் இரவு முழுவதும் ஒரு கல்லறைத் தோட்டத்தினுள் அலைந்து திரிந்தான். விழுந்து எழுந்தும், புதர்களில் உரசியும் அங்கிருந்து விரைவில் வெளியேறிவிட்டான். மறுநாள் காலையில் ஒருவர் இவனிடம், “பூதங்களால் நம்மைத் தாக்க முடியாது என்று உனக்குத் தெரியாதா” என்று கேட்டார்.…
