Skip to content Skip to footer

Rev. R. Ranjit Suthir M. A., B. D., M. Th.

88 articles published

பரிசுத்தஆவியானவரின் பெலன்!

பரிசுத்தஆவியானவரின் பெலன்! இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம் (அப்போஸ்தலர் 2:32). “அப்பாவின் பெயருக்கு ஏன் இழுக்குக் கொண்டுவருகிறாய்” என்று ஒரு வாலிபனிடம் கேட்டபோது, “அப்பாவின் காலம் வேறு, இந்தக் காலம் வேறு. அன்று அவர் நடந்தபடி இன்று நானும் நடந்தால் இந்த உலகம் என்னை முட்டாளாக்கிவிடும்” என்றான். வாழ்க்கை மாற்றங்களுக்குக் கால இடைவெளி, சமூக இடைவெளி, சந்ததி இடைவெளி என்று பல காரணங்கள் உண்டு. அதிலும் சில உண்மைகள் இருந்தாலும், நமது முன்னோர் மாதிரியா…

என்னில் என் இயேசு!

என்னில் என் இயேசு! பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, …பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார் (அப்.1:8). பெற்றோர் வாழும்போது, “இவள், இவன் எங்களுடைய மகள், மகன்” என்று சொல்வதுண்டு. அவர்கள் மறைந்த பிற்பாடு, நாம், “இன்னாருடைய மகள் அல்லது மகன்” என்று நம்மை மாத்திரமல்ல, மறைந்த பெற்றோரையும் அறிமுகப்படுத்துகிறோம். ஆக, மறைந்த பெற்றோரின் பிள்ளைகள் நாங்கள்தான் என்பதற்கு நாமே சாட்சிகள். இன்னொரு வகையில் சொன்னால், நமது பெற்றோர் தமது பிள்ளைகளை தங்கள் சாட்சிகளாக விட்டுவிட்டு…

பெருமையை வெல்லும் தாழ்மை!

பெருமையை வெல்லும் தாழ்மை! ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை (1கொரி.15:10). இன்று நான் வாழுகின்ற வாழ்வு, முந்திய வாழ்வைவிட சிறப்படைந்தது ஆச்சரியம்தான். இப்படிப்பட்ட மாற்றத்திற்கு, ஒரு மயிர்க்கொட்டிப்புழு வண்ணத்துப் பூச்சியாக மாற்றமடைந்ததை ஒப்பிடலாம். ஆனால், என்னிலும், என்னுள்ளும் வந்த இந்த மாற்றமானது, பலமுறை விழுந்து எழும்பிய வளர்ச்சியும், மயிர்க்கொட்டிப்புழுவின் மாற்றத்திலும் மேலானது. மயிர்கொட்டிப்புழுவின் மாற்றம் இயல்பானது; என் வாழ்வின் மாற்றமோ இயல்புநிலைக்கு அப்பாற்பட்டது. ஏனெனில் நான் அந்தப் புழுவிலும் கீழ்நிலையில்…

கண்களும் மனதும் திறக்கப்படட்டும்!

கண்களும் மனதும் திறக்கப்படட்டும்! அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து… (லூக்.24:45). வேதவாக்கியங்களை வாசிக்கும்போது ஏதாவது புரியாதிருந்தால் நாம் என்ன செய்கிறோம்? ஒன்றில் அதைத் தவிர்த்துவிடுவோம்; அல்லது ஏதாவது துணை நூலை நாடுவோம்; அல்லது யாரிடமாவது கேட்போம். எப்போதாவது பரிசுத்த ஆவியானவரின் துணையை நாடி, அமர்ந்திருந்து அறிய முயற்சித்திருக்கிறோமா? உண்மைதான். அதற்கெல்லாம் நேரம் எங்கே? நாம் எல்லோரும் ஜெபிக்கிறவர்கள், வேதம் வாசிக்கிறவர்கள்; அதில் சந்தேகமே இல்லை. ஆனால் இந்த அவசர உலகில், இரவிரவாக விழித்திருந்து விடியற்காலையில்…

என்னை அவர் அறிந்திருக்கிறார்!

என்னை அவர் அறிந்திருக்கிறார்! அவர் மூன்றாம்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, …நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் அறிவீர் என்றான் (யோவான் 21:17). உயிர்த்த இயேசு பேதுருவிடம் சம்பாஷித்த திபேரியா கடலோரத்திலே, இயேசுவின் சிலையொன்றும், அதன் பாதத்திலே மண்டியிட்டு ஏறிட்டுப் பார்ப்பது போன்ற பேதுருவின் சிலையொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அது வெறும் சிலைதான்; என்றாலும் அதைப்பார்க்கும்போது பேதுரு அன்று எப்படி மனமொடிந்திருப்பார் என்ற கற்பனை தோன்றும். அன்று பேதுருவிடம் கேட்ட அதே கேள்வியை இன்று இயேசு நம்மிடம் கேட்டால்…?…

என்னைப் பெலப்படுத்துகின்ற இயேசு!

என்னைப் பெலப்படுத்துகின்ற இயேசு! அவர் கர்த்தர் என்று சீமோன் பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், …கடலிலே குதித்தான் (யோவான் 21:7). அவசர புத்தி, இதுவொரு குணவியல்பு. சில வேளைகளில் இது நன்மை தந்தாலும், பல வேளைகளிலும் குழப்பத்தை ஏற்படுத்திவிடும். அதன் பின்விளைவுகள் கஷ்டமாகவே இருக்கும். இந்த நாளிலும் ஏதாவது செய்வதற்காக அவசரப்பட்டு முடிவெடுத்திருக்கிறீர்களா? கொஞ்சம் நிதானித்து முன்செல்வது நல்லது. அன்பானவர்களே, பேதுருவின் இடத்தில் நம்மை நிறுத்திப்பார்ப்போம். ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர், இரவு முழுவதும் பிரயாசப்பட்டு, ஒரு மீனும்…