Skip to content Skip to footer

Rev. R. Ranjit Suthir M. A., B. D., M. Th.

88 articles published

அது போதுமா?

அது போதுமா? போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல … (1இராஜா.19:4). டச்சு தேசத்து பிரபல கலைஞர் வின்சென்ட்பென் கோஹ், தனது 24வது வயதில் சுவிசேஷ ஊழியத்துக்குத் தான் அழைக்கப்பட்டதாக உணர்ந்து, 1878ல் ஒரு நற்செய்திப்பணி பயிற்சி மையத்தில் சேர்ந்தார். அங்கே பட்டம் பெற்றபின், ஒரு வருட காலம் போதகராக ஊழியம் செய்து, நற்செய்தி அறிவித்து வந்தார். பின்னர் 1889ல் பென் கோஹ் தனது நற்செய்திப்பணிக்கான அழைப்பைத் துறந்துவிட்டார். காரணம் தெரியவில்லை.…

அவருடைய காலடிகளில் …

அவருடைய காலடிகளில் … எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று சொல்லி … தண்ணீரை அடித்தவுடனே அது இரு பக்கமாகப் பிரிந்ததினால் எலிசா இக்கரைப்பட்டான் (2 இராஜா.2:14). “ஒரு சிறுவன் பின்பற்ற விரும்பும் காலடிகள், தன் தகப்பனார் நடந்து முடித்து விட்டதாக நினைத்து மூடிவிட்ட காலடிகளாகும்” என்றார் ஒருவர். ஆனால், எலியாவின் வாழ்க்கையில் அப்படி இல்லை. எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: “எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே” என்று சொல்லித் தண்ணீரை அடித்தவுடனே அது இருபக்கமாகப் பிரிந்ததினால்…

சுழல்காற்றின் மத்தியில் …

சுழல்காற்றின் மத்தியில் … அவர்கள் பேசிக்கொண்டு நடந்து போகையில், இதோ, அக்கினி ரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது (2இராஜா.2:11). கழுகுகள் ஒரு வித்தியாசமான பறக்கும் பழக்கத்தைப் பெற்றுள்ளன. அவை புயல் வீசும்போது பெருங்காற்றைக் கண்டு பயந்து தூரமாகப் பறந்து செல்லாமல், அதை நேருக்கு நேராக சந்திக்கும் தன்மை உடையவை. மற்றப் பறவைகள் பயந்து தூர விலகிப் பறந்து செல்லும்போது, கழுகுகள் மட்டும் தங்களை உயரத்தில் உந்தித்தள்ள இந்தக் காற்றுடன் மோதுகின்றன. ஒரு புயல்…

வெளிச்சம் இன்னும் பிரகாசிக்கட்டும் !

வெளிச்சம் இன்னும் பிரகாசிக்கட்டும் ! எலியா தன் சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தான்; அது இருபக்கமாகப் பிரிந்தது. அவர்கள் …அக்கரைக்குப் போனார்கள் (2இராஜா.2:8). ஆண்டவருக்குச் சேவை செய்தல் இளைஞர்களுக்கு மட்டும் உரியதல்ல. ஜான்வெஸ்லி என்ற புகழ்பெற்ற தேவ ஊழியர், தனது 90வது வயதில் மரணமடையும் வரை பிரசங்கம் செய்தார். புளாரிடாவிலுள்ள மகதலேனா ஏரியைச் சேர்ந்த கிளாடிஸ் ஸ்டால், 82 வருடங்கள் ஓய்வு நாள் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அவர் தனது 14ஆம் வயதில் கற்பிக்க ஆரம்பித்தார். 96வது வயதிலும்,…

படிப்படியாக …

படிப்படியாக … கர்த்தர் எலியாவைச் சுழல்காற்றிலே பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப் போகிறபோது எலியா, எலிசாவோடே கூடக்… புறப்பட்டுப்போனான் (2இராஜா. 2:1). தேசிய நெடுஞ்சாலை வழியாக ஒரு மனிதன் தன் வாகனத்தை ஓட்டிச் சென்றான். திடீரென ஒரு அடர்த்தியான மூடுபனிக்குள் அகப்பட்டான். எதிரே இருப்பதை அறியமுடியாத ஆபத்தான சூழ்நிலையில், என்ன செய்யலாம் என்று அவன் திகைப்புடன் சிந்தித்தான். பெரிய விளக்குகளின் ஒளி எதிரே சாலையில் இருந்த பிரதிபலிப்பான்களில் பட்டுத்தெறித்துப் பிரகாசிப்பதைக் கண்ட அவனால், சாலையின் அமைப்பு ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது. முதல்…

ஜீவனுள்ள நம்பிக்கை!

ஜீவனுள்ள நம்பிக்கை! உன்னதமானவராகிய கர்த்தர் பயங்கரமானவரும், பூமியின் மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாயிருக்கிறார் (சங்.47:2). ரோம அரசாட்சியினாலும், வைராக்கியமுள்ள யூதராலும், சொந்த வீட்டாராலும் ஆரம்பகால பல கிறிஸ்தவர்கள் பல இன்னல்களை அடைந்தார்கள், துன்புறுத்தப்பட்டார்கள், கொலையும் செய்யப்பட்டார்கள். சிதறுண்டு போனார்கள். விசுவாசத்தினிமித்தம் உபத்திரவப்பட்ட அந்த சமயத்தில் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட புதிய விசுவாசிகளுக்கு ஊக்கமளிப்பதாகவே பேதுரு இந்த நிருபத்தை எழுதியுள்ளார். “நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளான ஒரு புதிய வாழ்வுக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகள்” என ஞாபகப்படுத்தியதோடு, இந்த உலகில் எது நேர்ந்தாலும், எல்லாமே நம்மைக்கைவிட்டாலும்,…