Skip to content Skip to footer

Rev. R. Ranjit Suthir M. A., B. D., M. Th.

88 articles published

விடியலில் இயேசு!

விடியலில் இயேசு! விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள் (யோவான் 21:4). எல்லா நம்பிக்கைகளும் சிதைந்து, முயற்சிகள் யாவையும் கைவிட்டு, பிடிப்பற்ற வாழ்வுடன் போராடிக்கொண்டிருக்கும்போது, எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத ஒருவர் நம்மைத் தாங்கும்படி நம் முன்னே வந்து நின்றால் எப்படி யிருக்கும்! இப்படியான அனுபவங்கள் ஏற்படுத்துகின்ற தாக்கங்கள் நம் வாழ்வைத் தலைகீழாகவே மாற்றிப்போடுகிறது. அன்று சீஷருக்கும் நடந்தது இதுதான். யோவான் 21ஆம் அதிகாரம் யோவான் சுவிசேஷத்தின் பிற்சேர்க்கை என்று சொல்லப்படுகிறது. இது, “இவைகளுக்குப்…

சந்தேகக் கேள்விகளும் பதில்களும்!

சந்தேகக் கேள்விகளும் பதில்களும்! நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார் (யோவான் 20:29). நம் எல்லோருக்குள்ளும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் சந்தேகம் எழத்தான் செய்கிறது. அதில் தவறில்லை. சில காரியங்களை நம்பவேண்டுமென்றால் சில சந்தேகங்களும் கூடவே எழும்பத்தான் செய்கிறது. ஆனால் அந்தச் சந்தேகம், நேர்மறையான பதிலுரையையா? அல்லது எதிர்மறையான பதிலுரையையா? எதைக் கொடுக்கிறது என்பதில்தான் நமது எழுச்சியும் வீழ்ச்சியும் தங்கியிருக்கிறது. மனதில் எழுகின்ற சந்தேகங்கள் ஒளிவுமறைவின்றி கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கான பதில் சுத்தமனதோடு கண்டுகொள்ளப்படுமானால் அது…

சந்தேகம் வேண்டாம்!

சந்தேகம் வேண்டாம்! நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் கால்களையும் பாருங்கள் (லூக்.24:38,39). மரிக்கும்போது நடப்பது என்ன? எப்படி ஆவி பிரிகிறது? பிரிந்தவுடன் என்ன நடக்கிறது? நடப்பதை நம்மால் பார்க்கமுடியுமா? இப்படிப் பல கேள்விகள் பலருக்குள் உண்டு. இறந்துபோனவரின் ஆவியைக் கண்டேன், அதற்குக் கால்கள் இல்லை. வெள்ளை உடை, அது இது இன்று பல கதைகள் சொல்கிறவர்களும் உண்டு. ஆனால், நமக்கு இப்படிப்பட்ட சந்தேகங்கள் எழாது, எழவும்கூடாது. இயேசுவின்…

இருதயம் உணர்வடையட்டும்!

இருதயம் திறக்கட்டும்! அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே… (லூக்கா 24:25). “இப்போதெல்லாம் சரியான மறதி. எல்லாம் சீக்கிரத்தில் மறந்துபோகிறது.” இன்று வயது முதிர்ந்தவர்கள் மாத்திரமல்ல, வயது வித்தியாசமே இல்லாமல் எல்லாருமே சொல்லுகிற விஷயம். ஆனால், மறக்கவேண்டியவற்றை மறக்க முடியாமல் அவற்றை இருதயத்தில் பத்திரமாகத் தேக்கி வைத்திருக்கிற நமக்கு, ஞாபகத்தில் இருக்கவேண்டியவைதானே மறந்துபோகிறது? நாம் முகம் கொடுக்கின்ற ஏராளமான பிரச்சனைகளுக்கு இந்த மறதியும், மறவாமையும் முக்கிய காரணங்கள் என்றால் மிகையாகாது.…

இருதயம் திறக்கட்டும்!

இருதயம் திறக்கட்டும்! அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே… (லூக்கா 24:25). “இப்போதெல்லாம் சரியான மறதி. எல்லாம் சீக்கிரத்தில் மறந்துபோகிறது.” இன்று வயது முதிர்ந்தவர்கள் மாத்திரமல்ல, வயது வித்தியாசமே இல்லாமல் எல்லாருமே சொல்லுகிற விஷயம். ஆனால், மறக்கவேண்டியவற்றை மறக்க முடியாமல் அவற்றை இருதயத்தில் பத்திரமாகத் தேக்கி வைத்திருக்கிற நமக்கு, ஞாபகத்தில் இருக்கவேண்டியவைதானே மறந்துபோகிறது? நாம் முகம் கொடுக்கின்ற ஏராளமான பிரச்சனைகளுக்கு இந்த மறதியும், மறவாமையும் முக்கிய காரணங்கள் என்றால் மிகையாகாது.…

பரிசுத்தமாக்கப்பட்டோம்!

பரிசுத்தமாக்கப்பட்டோம்! இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்(எபி. 10:10). “வாழ்க்கையின் அரைவாசிக் காலத்தைப் பாவத்திலேயே வாழ்ந்துவிட்டேன். இனி மீதமுள்ளக் காலங்களில் பாவத்தைவிட்டு புண்ணியத்தைச் செய்து புண்ணியம் சேர்க்கப்போகிறேன். செய்த பாவத்தைப் பார்க்கிலும் அதிக புண்ணியத்தைச் சேர்த்துக்கொண்டால், பாவம் இல்லாமற் போய்விடும்” என்றார் ஒருவர். இந்த மூடநம்பிக்கையில் இன்றும் பலர் வாழுகின்றனர். நாம் செய்யும் நன்மைகளும், தான தர்மங்களும், நற்காரியங்களும் ஒருநாளும் நம்மைப் பாவத்தினின்று மீட்கமுடியாது. பாவம் செய்து அதனால் சம்பாதித்த பணத்தை தேவனுக்குக்…