உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம்! அப்பொழுது அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் என்றான்; அதற்கு ஜனங்களெல்லாரும் இது நல்ல வார்த்தை என்றார்கள் (1இராஜா.18:24). ஒரு பத்திரிக்கையில் ஒரு கேலிச் சித்திரம் இப்படி இருந்தது. ஒரு சிறுவன் தனது படுக்கையின் அருகில் ஜெபிப்பதற்காக முழங்காற்படியிட்டு நின்று இப்படி ஜெபிக்கிறான். சலிப்பாக அவன் செய்த ஜெபம் “ஜிம் மாமாவுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை, என்னுடைய சகோதரிக்கு அவள் விரும்பும் நாள் இன்னும் கிடைக்கவில்லை. என்னுடைய பாட்டியின் உடல்நிலை இன்னும் மோசமாகவே…
இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீ தானா? அதற்கு அவன்; இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல; கர்த்தரின் கட்டளைகளை விட்டுப் பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள் என்றான் (18:18). ஒருமுறை ஒரு புகழ்பெற்ற தொழில்முறை கோல்ப் விளையாட்டு வீரர் ஒரு போட்டியில் அப்போதைய தேசத்தின் ஜனாதிபதி ஜாக் நிக்கொலாஸ், பில்லிகிரகாம் ஆகியோருடன் விளையாடிக் கொண்டிருந்தார். விளையாட்டு முடிந்தபின் எதிர் டீமில் உள்ள ஒருவர் இவரிடம், “ஹலோ! நீங்கள் ஜனாதிபதி, பில்லிகிரகாம் ஆகிய இருவருடன் விளையாடியது எப்படி…
போய் … சொல்.... அப்பொழுது தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடினது; வாய்க்காலையும் தண்ணீரால் நிரப்பினான் (1இராஜா.18:35). பல வருஷங்களுக்கு முன் இங்கிலாந்திலுள்ள லண்டனில் ராயல் ஆல்பர்ட் ஹால் மண்டபத்தில் ஒரு பெரிய மிஷனெரி பேரணி நடைபெற்றது. வெல்லிங்டன் நகரம் பிரபு அங்கு இருந்தார். இவர்தான் நெப்போலியன் போனபார்ட்டின் சேனையைத் தோற்கடித்தவர். ஒரு போதகர் அவரிடம் இப்படிக் கேட்டார்: “என் ஆண்டவனாகிய பிரபுவே! உங்களுக்கு நற்பணிகள் மீது நம்பிக்கை உண்டா?”. பிரபு போதகரிடம், “உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டளைகள் எவை?” என்று…
இடைவிடாத, ஊக்கமான ஜெபம்! அந்தப் பிள்ளையின்மேல் மூன்றுதரம் குப்புற விழுந்து, … இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பி வரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான் (1இரா.17:21). E.M.பௌன்ட்ஸ் இப்படி எழுதியுள்ளார். இன்று இது நமது திருச்சபைகளுக்கு நிச்சயம் தேவை: அதிகமான இயந்திரங்கள் அல்ல, புதிய அமைப்புக் குழுக்கள் அல்ல, புதிய நவீன வழிமுறைகள் அல்ல: ஆனால், பரிசுத்த ஆவியினால் பயன்படுத்தப்படுகிறவர்கள், வல்லமையாய் ஜெபிக்கக்கூடிய ஜெபவீரர்கள் ஆகிய இவர்கள்தான் திருச்சபைக்குத் தேவை. எலியா அப்படிப்பட்ட ஒரு மனிதனுக்கு…
ஆறு வற்றியபோது… தேசத்தில் மழை பெய்யாதபடியினால், சில நாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று (1 ராஜா 17:7). மார்ட்டின் லூத்தரின் நண்பனான ஜான் பிரென்ஸ் சக்கரவர்த்தி ஐந்தாம் சார்லஸினால் வெறுக்கப்பட்டார். அவர் அடிக்கடி ஜான் பிரென்ஸைக் கொலை செய்யவும் முயற்சித்தார். ஒருதடவை அவரைக் கைது செய்து அழைத்துவருமாறு ஒரு பிரிவு போலீஸ்காரர்களை அனுப்பி வைத்தார். இதைக் கேள்விப்பட்ட பிரென்ஸ் ஒரு பெரிய ரொட்டியை எடுத்துக் கொண்டு மறைவாகப் பக்கத்துக் கிராமத்திற்குச் சென்று ஒரு வைக்கோற்போரினுள் ஒளிந்துக் கொண்டிருந்தார். அவர்…
தேவன் பாதுகாக்கிறார்! உடனே அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பது பேரையும் பட்சித்தது (2இராஜா.1:10). இரவு நேரத்தில், முரட்டுத்தனமான போர் வீரர்கள் ஜெர்மன் நாட்டின் ஸ்லெஸ்விக் நகர வீதி வழியே சென்றனர். கடுங்குளிரின் மத்தியிலும், வீடுகளின் கதவைத் தட்டி, உள்ளே புகுந்து, சூறையாடி, மக்களைத் துன்புறுத்தியதால், மக்கள் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தனர். அந்நகரில், ஒரு மூதாட்டி, தனது விதவையான மகள், பேரனுடன் வசித்துவந்தார். அவள், “ஆண்டவரே, பகைவர் நுழைந்து எங்களைத் துன்புறுத்தாதபடி வீட்டைச் சுற்றிலும் ஒரு தடுப்புச்…
